முதுகுளத்தூரில் பலத்த காற்று எதிரொலி: கட்டிட சாரம் சரிந்து விவசாயி பலி

முதுகுளத்தூரில் பலத்த காற்று எதிரொலியால் கட்டிட சாரம் சரிந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுளத்தூரில் பலத்த காற்று எதிரொலி: கட்டிட சாரம் சரிந்து விவசாயி பலி
Published on

முதுகுளத்தூர்:

கஜா புயல் நேற்று கரையை கடந்த பின்பு உள் மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை காற்றும் மழையுமாக இருந்தது. முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத் தூவலைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படியான் (வயது70).

இவர் நேற்று மழை பெய்தபோது வெளியே சென்றார். அப்போது பலத்த காற்று வீசியது. இதில் பதினெட்டாம்படியான் வீட்டின் அருகே உள்ள கட்டிடத்தின் சாரம் சரிந்து அவர் மீது விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com