கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் மிகுந்த மனவேதனை அடைந்த வாலிபர் சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை
Published on

கோவை:

கோவை மதுக்கரை அருகே உள்ள தம்பாகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் அசோக்குமார் (வயது 21). இவரது தாய் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். 

தாய் இறந்ததால் அசோக்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அசோக்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அசோக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com