தளி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கணவன்-மனைவி பலி

தளி அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி கணவன்-மனைவி பலியானார்கள்.
விபத்து
விபத்து
Published on

தேன்கனிக்கோட்டை:

கர்நாடக மாநிலம், பெங்களூரு கோவிந்தபுரா பகுதியை சேர்ந்தவர் சதர்கான் (வயது 67). இவர் மரக்கடை நடத்தி வந்தார். இவர், தனது மனைவி குலாப்கான் (55) என்பவருடன் நேற்று முன்தினம் தளி பகுதியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்தார். பின்னர் அவர்கள் தேன்கனிக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

தளி-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ராம்நகர் அருகே இரவு சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்ட சதர்கான் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த குலாப்கானை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரும் நேற்று அதிகாலை இறந்தார்.

இந்த விபத்து குறித்து தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் இறந்த கணவன்-மனைவி 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com