மோட்டார் சைக்கிள் உரசியதால் ஆத்திரம்- இரும்பு வியாபாரி கீழே தள்ளி கொலை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இரும்பு வியாபாரி கீழே தள்ளி கொலை செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் உரசியதால் ஆத்திரம்- இரும்பு வியாபாரி கீழே தள்ளி கொலை
Published on

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவைச் சேர்ந்தவர் பிச்சை மணி (வயது 56). பழைய இரும்பு வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து காந்தி சிலை அருகே உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கம்பம் தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்த வாலிபர் செங்கிஸ்கான் வந்தார். இவர் மீது பிச்சை மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் உரசியது. இதனால் 2 பேருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த செங்கிஸ்கான் இரும்பு வியாபாரி பிச்சை மணியை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் பிச்சை மணிக்கு தலையில் அடிபட்டது. ரத்தம் கொட்டியதால் துடி துடித்தார்.

இதனைபார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவரை தூக்கிக் கொண்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு பிச்சை மணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறிதது கம்பம் வடக்கு போலீசார் செங்கிஸ்கான் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய அவரை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com