கோபி அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி

கோபி அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார். நண்பர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
கோபி அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி
Published on

கோபி:

கோபி அடுத்த புதுக்காட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). கட்டிடவேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் நவநீதன் (32). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். நவநீதன் வண்டியை ஓட்ட பின்னால் செந்தில்குமார் உட்கார்ந்து வந்தார்.

வண்ணாங்காடு பகுதியில்ஒரு வளைவில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டில் உள்ள ஒரு பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இருவரையும் அக்கம்- பக்கத்தினர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செந்தில் குமார் பரிதாபமாக இறந்தார்.

நவநீதன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com