கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே பழையபேட்டை நரசிம்மன்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). கட்டிட தொழிலாளி. இவர் தனது மொபட்டில் சம்பவத்தன்று நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக பெருமாள் வந்த மொபட்டு மீது மோதியது. இதில் தூக்கில் வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். 

அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு அருகில் இருந்த கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் வரும் வழியிலேயே உயிர் இழந்தார் என்று தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com