கூடங்குளம் அருகே மருமகள் பிரிந்து சென்றதால் மாமியார் தற்கொலை

மகனுடன் ஏற்பட்ட தகராறில் மருமகள் பிரிந்து சென்றதால் மனமுடைந்த மாமியார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடங்குளம் அருகே மருமகள் பிரிந்து சென்றதால் மாமியார் தற்கொலை
Published on

நெல்லை:

கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி அந்தோணி ஜெரால்டு கருணா (வயது50). இவர்களது மகன் ஜெயந்தன். அவரது மனைவி சுபாஷினி. இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெயந்தனுக்கும் அவரது மனைவி சுபாஷினிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுபாஷினி தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது மாமியார் அந்தோணி ஜெரால்டு கருணாவுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. 

கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமால் அமைதியாக இருந்தார். நேற்று அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com