குஜராத் பாடகர் மீது ரூபாய் நோட்டுகளை மழையாக பொழிந்த ரசிகர்கள்

குஜராத் பாடகர் பிரிஜ்ராஜ் காந்திவ் மீது ரசிகர்கள் லட்சத்திற்கும் அதிகமான பணத்தை மேலே வீசிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குஜராத் பாடகர் மீது ரூபாய் நோட்டுகளை மழையாக பொழிந்த ரசிகர்கள்
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கோவிலில் நேற்று பாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பாடகர் பிரிஜ்ராஜ் காந்தி பாட்டு பாடி கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த சிலர் அவர் மீது பணத்தை வீசினர். மேடை முழுவதும் ரூபாய் நோட்டுகளாக குவிந்தது.

இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த குற்ற சாட்டிற்கு பதில் அளித்த பிரிஜ்ராஜ், இந்த மாதம் நான் இலவசமாக நிகழ்ச்சி நடத்தி கொடுப்பேன். நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணம் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படும். மேலும், நன்கொடையாகா வழங்கப்படும் என கூறினார்.

இச்சம்பவம் குறித்து பேசிய பா.ஜ.க. தலைவர் ஜித்து பாய், மக்கள் தங்கள் அன்பை இது போன்ற செயல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இது தவறான நோக்கத்தில் செய்யப்பட்டது அல்ல என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com