

இருந்தாலும் பிசிசிஐ அசாருதீனை விலக்கி வைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தலைவர் தேர்தல் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். அதை அச்சங்கம் நிராகரித்தது.
இந்நிலையில் ‘‘மொயின்-உத்-தவ்லா கிரிக்கெட் தொடருக்கான ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட இரண்டு அணிகளிலும் உள்ள வீரர்கள் இரண்டு நாட்கள் லீக்கில் மூன்று சதங்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
ஐந்து விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது. தகுதியான வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
லோதா கமிட்டி பரிந்துரையின்படி தேர்வாளர்கள் குறைந்தது 25 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். தேர்வாளர்களை நியமிக்கும்போது இந்த விதிமுறை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.