

இதனால் இங்கிலாந்தில் உள்ள ஐ.சி.சி.க்கு உட்பட்ட லாப்போரோவ் யுனிவர்சிட்டியில் ஹபீஸ் பந்து வீச்சு கடந்த 1-ந்தேதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது ஐ.சி.சி.யின் விதிமுறையான 15 டிகிரிக்கும் மேல் கையை வளைத்து பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் ஹபீஸ்க்கு 24 மாதங்கள் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 2014-ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது விதிமுறை மீறி பந்து வீசிய கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் டிசம்பரில் இருந்து பந்து வீச தடைபெற்றார். பின்னர் தனது பந்து வீச்சை சரிசெய்தபின்னர், ஏப்ரல் மாதம் பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.