மாமல்லபுரத்தில் 11-ந்தேதி ராணுவ கண்காட்சியை மோடி தொடங்கி வைக்கிறார்

மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 11-ந்தேதி நடைபெற உள்ள ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மாமல்லபுரத்தில் 11-ந்தேதி ராணுவ கண்காட்சியை மோடி தொடங்கி வைக்கிறார்
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி அடுத்த மாதம் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 280 ஏக்கர் நிலப்பரப்பில் கண்காட்சி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கு பெறுகிறார்கள்.

பிரதமர் மோடி வருகையையொட்டி கண்காட்சி நடைபெறும் இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக விழா மேடை அருகே ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் 3 நவீன ஹெலிகாப்டர் தளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

தொடக்க விழா நடைபெற உள்ள இடத்தில் கடலில் கப்பல் சாகசம் செய்யும் போது கரையில் இருந்து பொதுமக்கள் பார்க்கவும் வசதி செய்யப்பட்டு வருகிறது.

கண்காட்சி தொடங்குவதையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விடுதிகளுக்கு வரும் நபர்களின் முழு விவரம் மற்றும் முகவரியை கேட்டு பெற வேண்டும் எனவும் விடுதியில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com