

அப்போது மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை தெரிவித்தார்.
இதுகுறித்து மோடி பேசுகையில் ‘‘மக்கள் தொகை பெருக்கம் ஒரு கட்டுபாடற்ற வேகத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த மக்கள் தொகை பெருக்கம் நமக்கும், வரவிருக்கும் சந்ததியினருக்கும் எண்ணில் அடங்கா பிரச்சனைகளை உருவாக்கும்.
ஒருவர் தனது குடும்பத்தை சிறியதாக வைத்திருப்பதும் ஒருவகை நாட்டுப்பற்றுக்கான செயல்தான். நாம் மரியாதை கொடுக்க அவர்கள் தகுதியானவர்கள். அதேபோல் பாராட்டுக்குரியவர்கள்.