

தமிழ்நாடு சட்டசபையில் காலியாக சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இன்று மாலை வெளியிட்டது.