மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்
Published on

ஆண்டிமடம்:

தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரையை அனுமதிக்க கூடாது என சட்டசபையில் வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின்  மற்றும்  தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

தா.பழூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் அங்கு மறியல் நடைபெற்றது. மறியலில் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராமதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சூசைராஜ், நாகராசன், எழிலரசி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், கண்ணதாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகைகுமரன் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

திருச்சி மாவட்டம் கல்லக்குடி ராஜா தியேட்டர் பேருந்து நிலைய த்தின் முன்பு பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் நகரச்செயலாளர் பால்துரை, முத்துக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் கோல்டன் ராஜேந்திரன் ,பெரியசாமி, செந்தாமரைக்கண்ணன், முருகேசன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கண்ணன் உள்பட சுமார் 35 பேர்  மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் கந்தர்வகோட்டை ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில்  சாலை மறியல் போராட்டம் மாவட்ட அவைத் தலைவர் மாரியய்யா தலைமையில் நடைபெற்றது.  தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், கந்தர்வகோட்டை நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட துணை அமைப்பு  பொறுப்பாளர்கள் சுந்தம்பட்டி ராமசாமி, அண்டனூர் முருகையா, நியூஸ் ராஜேந்திரன், சௌந் தர்ராஜன், அரவம்பட்டி முத்துக்குமார் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com