மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி

மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த எஸ்.பி.சசாங் இன்று மாற்றப்பட்டு உள்ளார். #Mizoram #Shashank #ChiefElectroralOfficer
மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி
Published on

புதுடெல்லி:

மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. லால் தன்ஹாவ்லா முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அம்மாநில சட்டசபைக்கு வருகிற 28-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த  எஸ்.பி.சசாங் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த சசாங் இன்று மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக ஆஷிஷ் குந்த்ரா என்பவரை நியமனம் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Mizoram #Shashank #ChiefElectroralOfficer

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com