

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 71 ரன்கள் எடுத்ததன் மூலம் கேப்டன் மிதாலி ராஜ் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் லிண்ட்சே ரீலர், எலிஸ் பெர்ரி, இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் ஆகியோர் தொடர்ந்து 6 அரைசதங்களை அடித்து சாதனைப் படைத்திருந்தனர். இந்தச் சாதனையை நேற்றயை 7-வது அரைசதம் முறியடித்து மிதாலி ராஜ் உலக சாதனைப் படைத்துள்ளார்.