நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாயமான மாணவி பீகார் ஓட்டலில் மீட்பு

‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டைவிட்டு வெளியேறி மாயமான மாணவி கோட்டீஸ்வரியை போலீசார் பீகார் ஓட்டலில் இருந்து மீட்டனர்.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாயமான மாணவி பீகார் ஓட்டலில் மீட்பு
Published on

அம்பத்தூர்:

சென்னை நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (வயது 19). இவர் ஏற்கனவே ஒரு முறை நீட் தேர்வு எழுதியதில் மதிப்பெண் அடிப்படையில் பல் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான இடம் கிடைத்தது.

அதை ஏற்காத அவர் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது மீண்டும் நீட் தேர்வு எழுதினார். ஆனால் கடந்த முறையை விட இப்போது குறைவான மதிப்பெண்களே கிடைத்தது.

இந்த நிலையில் மாணவி கோட்டீஸ்வரி திடீரென்று மாயமானார். இதுபற்றி அவரது பெற்றோர் தலைமை செயலக காலனி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தார். கோட்டீஸ்வரி மாயமான போது தனது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார். அதில் ‘நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். என்னை யாரும் தேட வேண்டாம்’ என்று கூறி இருந்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சென்ட்ரலில் இருந்து ரெயிலில் ஏறி எங்காவது சென்றிருக்கலாம் என்று தெரிய வந்தது. அதன்படி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாணவி கோட்டீஸ்வரி பீகாரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பீகாருக்கு சென்றனர். அங்கு ஓட்டலில் தங்கியிருந்த கோட்டீஸ்வரியை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com