ஒட்டன்சத்திரம் அருகே மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

ஒட்டன்சத்திரம் அருகே மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

ஒட்டன்சத்திரம் அருகே மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த சலவைத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் வினோத் (வயது23). இவருக்கும் வடகாடு பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருங்கி பழகினர்.

அப்போது வினோத் மைனர் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்த போது வினோத் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com