வடமதுரை அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர்

வடமதுரை அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடமதுரை அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர்
Published on

வடமதுரை:

வடமதுரை அருகே பாடியூரைச் சேர்ந்தவர் குமார். இவர் கோவையில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே மில்லில் மதுரையைச் சேர்ந்த 16 வயது பெண்ணும் பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். எனவே 2 பேரும் கோவையை விட்டு வெளியேறி வடமதுரை அருகே உள்ள பாடியூருக்கு வந்தனர். மைனர் பெண்ணை குமார் கடத்தி வந்ததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து 2 பேரையும் வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.

மகள் மாயமானது குறித்து மதுரை போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். எனவே 2 பேரையும் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com