திருமணத்தை மறைத்து மைனர் பெண்ணுடன் 2-வது திருமணம்: வாலிபர் கைது

தலைஞாயிறில் மைனர் பெண்னை இரண்டாம் தாரமாக திருமணம் செய்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருமணத்தை மறைத்து மைனர் பெண்ணுடன் 2-வது திருமணம்: வாலிபர் கைது
Published on

தலைஞாயிறு:

தலைஞாயிறு சந்தை வெளி தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கொடியாளத்தூரில் தனது உறவினர் வீட்டில் தங்கி நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்களை பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த அருள்(எ)அருள்ராஜ் என்பவர் கவிதாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கவிதாவும், அருளும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு திருப்பூர் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து கவிதா வீட்டார் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த பிறகு திருப்பூரில் இருந்த இருவரையும் அழைத்து வந்து அருள்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கவிதாவை மருத்துவ பசோதனைக்கு பிறகு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com