16 வயது சிறுமியை அடித்துக்கொன்ற வளர்ப்புத்தாய் - உ.பி.யில் கொடூரம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குடும்பப்பிரச்சனை காரணமாக 16 வயது சிறுமியை வளர்ப்புத்தாய் கொடூரமாக அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #stepmother #Minorgirl
16 வயது சிறுமியை அடித்துக்கொன்ற வளர்ப்புத்தாய் - உ.பி.யில் கொடூரம்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் சாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷோகின். இவருக்கு ஷாமின் என்ற 16 வயது மகள் உள்ளார். ஷோகின் சிதாரா பேகம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், நேற்று ஷாம்னுக்கும், அவரது வளர்ப்புத்தாய் பேகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துக்கொண்டனர். சண்டை முற்றிய நிலையில், பேகம் தனது வளர்ப்பு மகளை கொடூரமாக அடித்துக்கொன்றார். இதற்கு ஷோகினும் உடந்தையாக இருந்துள்ளார்.

இக்கொலை குறித்து ஷாம்னியின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேகம் மற்றும் அவரது கணவர் ஷோகின் இருவரையும் கைது செய்தனர். இக்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #stepmother #Minorgirl

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com