நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை, வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

தாம்பரம்:

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று மதியம் அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது. 15 நாட்களில் காய்ச்சலின் தாக்கம் முழுவதும் கட்டுப்படுத்தப்படும். சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு மருத்துவ குழு அனுப்பப்பட்டுள்ளது.

நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பொது மக்கள் காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com