அதிமுக மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #ADMK
அதிமுக மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2018-19 ம் நிதியாண்டில் 1½ லட்சம் பயனாளிகளுக்கு ரூ.700 கோடி மதிப்பில் வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது. 12,000 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. 77 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.50 கோடி மதிப்பில் நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட உள்ளது. இதேபோன்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது அ.தி.முக. அரசு. சேலத்தில் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் கால்நடை பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நிலங்களில் தீவனங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் மாவட்டங்களுக்கு உடனடியாக தீவனங்கள் வழங்கப்படும் கோமாரி நோய் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனை மடங்கு மரம் விழுந்ததோ அதற்கு இணையாக மூன்று மடங்கு மரங்கள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு துறை சார்பாக மரங்கள் நடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterVijayabaskar #ADMK

X

Maalai Malar
www.maalaimalar.com