போளூர்-சென்னைக்கு 2 புதிய பஸ்கள்- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

போளூர்-சென்னைக்கு 2 புதிய பஸ்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். #ministersevurramachandran
போளூர்-சென்னைக்கு 2 புதிய பஸ்கள்- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
Published on

போளுர்:

திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்திற்கு 22 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன. போளூர் போக்குவரத்து மணிமனைக்கு 4 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 2 பஸ்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 2 புதிய பஸ்கள் இயக்கத்தை போளூர் பஸ் நிலையத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ்கள் ஆரணி, ஆற்காடு வழியாக சென்னைக்கு செல்கிறது. 

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் முருகன், போளூர் துணை மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministersevurramachandran

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com