முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு உதவி செய்யுங்கள் - செங்கோட்டையன் வேண்டுகோள்

முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு உதவி செய்யுங்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Governmentschool #Sengottaiyan
முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு உதவி செய்யுங்கள் - செங்கோட்டையன் வேண்டுகோள்
Published on

சென்னை:

அமைச்சர் செங்கோட்டையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த கல்வியைத் தந்து, அதன் மூலமாக அவர்களின் எதிர்காலத்தை, பிரகாசமான எதிர்காலமாக மாற்றுவதற்காக, ஜெயலலிதா 14 வகையான பொருட்களை விலையில்லாமல் மாணவச்செல்வங்களுக்கு வழங்கி, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு சீர்த் திருத்தங்களை மேற் கொண்டதால், மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் நம் மாநிலத்திற்கு நற்சான்று வழங்கிவருகிறது.

இவ்வேளையில், மேலும் முத்தாய்ப்பாக, தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் பள்ளிகளை தத்தெடுத்தும், இவர்களோடு பொதுமக்களும் கரம் கோர்த்தும் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு, சேவை செய்திடவாருங்கள் என்று இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.

முதல்-அமைச்சரின் தலைமையில் செயல்படும் அரசு, பள்ளிக் கல்வித் துறைக்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.27,205 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து சாதனைப் படைத்து வருகிறது.

கல்வி ஒன்றால்தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும். எனவே, அன்பு உள்ளமும் தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Governmentschool #Sengottaiyan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com