காளையார்கோவிலில் பால் விற்பனை நிலையத்தில் பணம் கொள்ளை

காளையார்கோவிலில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
காளையார்கோவிலில் பால் விற்பனை நிலையத்தில் பணம் கொள்ளை
Published on

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கல்லல் சாலையில் பால் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு செந்தில்குமார் வீட்டுக்குச் சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாவில் இருந்த 21 ஆயிரத்து 650 ரூபாயை திருடிக் கொண்டு தப்பினர்.

இன்று காலை கடையை திறக்க வந்த செந்தில்குமார் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பணம் கொள்ளை போயிருந்தது.

இது குறித்த புகாரின் பேரில் காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை நகர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரிசி கடை உள்ளிட்ட 3 கடைகளில் அடுத்தடுத்து தொடர் கொள்ளைகள் நடந்தன.

இந்த வாரமும் 3-க்கும் மேற்பட்ட கடைகளில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். நகரில் தொடரும் இந்த சம்பவத்தால் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com