

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்துக்குட்பட்ட கிரால்போரா சேக்போரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.