மீனம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

மீனம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மீனம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
Published on

ஆலந்தூர்:

மீனம்பாக்கம் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் மீனம்பாக்கம் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பதும் மீனம்பாக்கம், திரிசூலம் பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com