தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் - ம.தி.மு.க. தீர்மானம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #sterliteprotest #MDMKresolution #ThoothukudiFiring
தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் - ம.தி.மு.க. தீர்மானம்
Published on

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
ம.தி.மு.க. தொடங்கப்பட்டு 24 ஆண்டுகள் நிறைவு பெற்று 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மே 67-ம் தேதி வரை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதி தீர்ப்பை எதிர்த்து, ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்பக்கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

தூத்துக்குடி படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைப்பது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். வால்மார்ட் இணைய வணிகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. #sterliteprotest #MDMKresolution #ThoothukudiFiring

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com