கொலம்பியாவில் போலீஸ் அகாடமி அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் - 5 பேர் பலி

கொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் அகாடமி அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். #ColumbiaCarBomb
கொலம்பியாவில் போலீஸ் அகாடமி அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் - 5 பேர் பலி
Published on

போகோடா:

மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமி அருகே இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கார் வெடிகுண்டு தாக்குதலில் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் கடும் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #ColumbiaCarBomb

X

Maalai Malar
www.maalaimalar.com