மயிலாடுதுறையில் 2 குடிசை வீடுகளில் தீ விபத்து

மயிலாடுதுறையில் 2 குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்து
தீ விபத்து
Published on

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை புதுத்தெரு பகுதியில் உள் மேட்டு தெருவில் ரகுமான்ஷா. இவரது மனைவி பாத்திமா பீவி(வயது65). இவர் தனது பேரக் குழந்தைகளுடன் வசித்து வந்தார்

நேற்று பகல் இவரது வீட்டின் மேல் கூறை தீ பற்றியதை கண்டு அலறியடித்து வெளியேறினர். இவர்கள் வீட்டின் அருகே இருந்த குமார் மனைவி மணிமேகலையின் வீடும் தீ மளமளவென பரவியதால் பற்றிகொண்டது இதுகுறித்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து மற்ற வீடுகளில் தீ பரவாமல் தடுத்தனர்.

இந்த தீவிபத்தில் பாத்திமாபீவி தனது பேத்தி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை, பணம் மகளிர் குழுவில் கட்ட வேண்டிய குழுவினரின் பணம் எரிந்து சேதமாகியது. இதன் மதிப்பு 2 லட்சம் இருக்கலாம். அதே போல் மணிமேகலை வீட்டிலும் நகை பணம் பொருட்கள் எரிந்து நாசம் இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com