இடப்பிரச்சினையில் வாலிபர் மீது தாக்குதல்: கணவன்- மனைவி கைது

மயிலாடுதுறை அருகே இடப்பிரச்சினையில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் மகாதானபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது33). அதே பகுதியை சேர்ந்தவர் மருதப்பன் மகன் குமார்(வயது52). இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் கடைத்தெருவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

அப்போது குமார், அவரது மனைவி மாலா(40), மகன் வசீகரன்(22) ஆகிய 3 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சதீஷ்குமார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் மற்றும் அவரது மனைவி மாலா ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய வசீகரனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com