உலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை, வங்காளதேசம் போட்டி மழையால் கைவிடப்பட்டது

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் - இலங்கை, வங்காளதேசம் போட்டி மழையால் கைவிடப்பட்டது
Published on

பிரிஸ்டோல்:

இலங்கை - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு பிரிஸ்டோலில் தொடங்குவதாக இருந்தது. இந்த போட்டிக்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதேபோல், நேற்று நடைபெற இருந்த தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என்று குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com