தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி - அமிர்தானந்தமயிக்கு பிரதமர் நரேந்திரமோடி விருது வழங்கினார்

தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர். #Modi #Amritanandamayi #SwacchBharat
தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி - அமிர்தானந்தமயிக்கு பிரதமர் நரேந்திரமோடி விருது வழங்கினார்
Published on

புதுடெல்லி:

சர்வதேச தூய்மை மாநாடு புதுடெல்லி கலாசார மையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயிக்கு, பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.

அவர் வழங்கிய ரூ.100 கோடி மூலமாக கங்கைக்கரையில் வசிக்கக் கூடிய ஏழை, எளிய மக்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ஆசிரமத்தின் தூய்மைத் திட்டங்கள் குறித்த காணொளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மாநாட்டில் மத்திய மந்திரிகள் உமாபாரதி, சுஷ்மா சுவராஜ், மனோஜ் சின்கா, ஹர்தீப்சிங்பூரி மற்றும் 50 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  #Modi #Amritanandamayi #SwacchBharat 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com