மசூத் அசார், ஹபிஸ் சயீத், தாவூத் இப்ராகிம் உள்ளிட்டோர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

மும்பை தொடர்குண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார், ஹபிஸ் சயீத், தாவூத் இப்ராகிம் மற்றும் சகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரை மத்திய அரசு இன்று பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.
மசூத் அசார்
மசூத் அசார்
Published on

மும்பை தொடர்குண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார், ஹபிஸ் சயீத், தாவூத் இப்ராகிம் மற்றும் சகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரை மத்திய அரசு இன்று  பயங்கரவாதிகளாக  அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கான ஆதாரங்களை கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உள்பட 22 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com