ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு மேரி கோம் தகுதி- சவால் விட்ட நிகாத் ஜரீனை வீழ்த்தினார்

டெல்லியில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் நிகாத் ஜரீனை தோற்கடித்த மேரி கோம், ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார்.
மேரி கோம்
மேரி கோம்
Published on

புதுடெல்லி:

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் நடைபெற்றது. 

இதில், 51 கிலோ உடல் எடைப் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜூனியர் உலக சாம்பியனான தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன், தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை தோற்கடித்தார். இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம், ரிது கிரிவாலை வீழ்த்தினார். 

அதன்பின்னர் தகுதி சுற்றின் இறுதி ரவுண்டு இன்று நடைபெற்றது. இதில் 36 வயதான மேரிகோம், 23 வயதான நிகாத் ஜரீனை எதிர்கொண்டார். போட்டியின் துவக்கத்தில் இருந்தே அனுபவம் நிறைந்த மேரி கோம் ஆதிக்கம் செலுத்தினார். அவரது தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஜரின் திணறினார். 

இறுதியில் 9-1 என்ற புள்ளிக் கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்றார். இதன்மூலம், ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் விளையாட மேரி கேம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேரி கோமை நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு அனுப்ப நிகாத் ஜரீன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com