மருதமலை கோவிலில் நாளை சூரசம்ஹார விழா

மருதமலை முருகன் கோவிலில் நாளை (செவ்வாய்கிழமை) சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. நாளை மறுநாள் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
மருதமலை கோவிலில் நாளை சூரசம்ஹார விழா
Published on

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள். மருதமலை முருகன் கோவிலில் நாளை (செவ்வாய்கிழமை) சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. விழா மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. பச்சை நாயகி அம்மன் சன்னதியில் சக்தி வேல் வாங்கி சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்கிறார். பின்னர் பக்தர்கள் விரதத்தை முடிப்பார்கள். சூரசம்ஹார விழாவில் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நாளை மறுநாள் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் அங்குள்ள மண்டபத்தில் நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. கோவில் துணை ஆணையர் மேனகா தலைமையில் குடிநீர், உணவு வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. வடவள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com