திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை அறையில் அடைத்து கற்பழித்த வாலிபர்

திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை அறையில் அடைத்து கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை அறையில் அடைத்து கற்பழித்த வாலிபர்
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் அழகுபாண்டி (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரேமா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இவர் பிளஸ்-1 படித்து வந்தார். நாளடைவில் இவர்கள் பழக்கம் அதிகரிக்கவே பிரேமாவை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பின்னர் சம்பவத்தன்று அவரை பல்லடத்தில் உள்ள தனது நண்பர் வினோத் என்பவரின் அறைக்கு அழைத்துச் சென்றார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

தனது மகளை காணாமல் திடுக்கிட்ட பிரேமாவின் பெற்றோர்கள் அழகுபாண்டி கடத்திச் சென்றது தெரிய வரவே அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அழகுபாண்டியை கைது செய்தனர். பிரேமாவை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com