ஒடிசாவில் பெண் தேர்தல் அதிகாரியை சுட்டுக்கொன்று மாவோயிஸ்டுகள் வெறியாட்டம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளால் தேர்தல் பணிபுரிய வந்த பெண் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #Maoists
ஒடிசாவில் பெண் தேர்தல் அதிகாரியை சுட்டுக்கொன்று மாவோயிஸ்டுகள் வெறியாட்டம்
Published on

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் பாராளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. 

புல்பானி சட்டசபை தொகுதிக்கு உள்ளிட்ட பகுதியில் தேர்தல் பணிபுரிய வந்த சஞ்சுக்தா திகால் என்ற பெண் அதிகாரியை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொலை செய்தனர்.

தேர்தல் பணிபுரிய வந்த பெண் அதிகாரியை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்றது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Maoists

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com