பல ஆண்களுடன் பழகியதால் தீர்த்துக் கட்டினேன்- தாயை கொன்ற மகன் வாக்குமூலம்

தனது தாய் பல ஆண்களுடன் பழகி வருவதாக அக்கம், பக்கத்தினர் கூறியதால் ஆத்திரம் அடைந்த நான் அவரை தீர்த்துக் கட்டினேன் என்று கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பல ஆண்களுடன் பழகியதால் தீர்த்துக் கட்டினேன்- தாயை கொன்ற மகன் வாக்குமூலம்
Published on

திருப்பூர்:

கைதான மாணவர் பிரவீன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது,

எனது தாயின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் பல ஆண்களுடன் பழகி வருவதாக அக்கம்,பக்கத்தினரும் என்னிடம் கூறினர். இதனால் நான் அவரை எச்சரித்தேன். அதன் பிறகும் அவர் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் என்னை மிகவும் கேலி செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே சம்பவத்தன்று தாயை கயிற்றால் நெரித்து கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com