திருப்புவனத்தில் பல வழக்குகளில் தேடப்பட்ட 5 ரவுடிகள் கைது

திருப்புவனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல வழக்குகளில் தேடப்பட்ட 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனத்தில் பல வழக்குகளில் தேடப்பட்ட 5 ரவுடிகள் கைது
Published on

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது 5 பேர் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் போலீசார் 5 பேரிடமும் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் கத்திகள் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் வல்லரசு (வயது 18), அமல்ராஜ் (17), ராஜசேகர் (18), சமயபாண்டி (18), மனோஜ்குமார் (17) என்பதும் இவர்கள் பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com