ரஞ்சி டிராபி கிரிக்கெட்- பஞ்சாப் அணியின் கேப்டனாக மந்தீப் சிங் நியமனம்

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் மந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். குர்தீரத் சிங் மான் துணைக் கேப்டன். #RanjiTrophy
ரஞ்சி டிராபி கிரிக்கெட்- பஞ்சாப் அணியின் கேப்டனாக மந்தீப் சிங் நியமனம்
Published on

இந்தியாவின் மிகப்பெரிய முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி வியாழக்கிமை (நவம்பர்-1) தொடங்குகிறது. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் ஆந்திராவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

இதற்கான பஞ்சாப் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மந்தீப் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குர்கீரத் சிங் மான் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான ஷுப்மான் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷுப்மான் கில், 2.  ஜீவன்ஜோத சிங், 3. அன்மோல்ப்ரீத் சிங், 4. மந்தீப் சிங், 5. சன்வீர் சிங், 6. குர்கீரத் சிங் மான், 7 அபிஷேக் குப்தா, 8. அபிஷேக் ஷர்மா, 9. மயாங்க் மார்கண்டே, 10. அர்பித் பன்னு, 11. வினய் சவுத்ரி, 12. சித்தார்த் கவுல், 13. ஷுபெக் கில், 14. பால்டெஜ் சிங், 15. பரிந்தர் ஸ்ரன், 16. ஷரத் லூம்பா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com