மணமேல்குடியில் கொரோனா பரிசோதனை முகாம்

மணமேல்குடி போலீஸ் நிலையத்தில், சுகாதார பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Published on

மணமேல்குடி:

மணமேல்குடி போலீஸ் நிலையத்தில், சுகாதார பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஆனால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் யாரும் முன் வராததால் போலீசாரின் உதவியை நாடினர். அப்போது போலீசார் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். சில வாகன ஓட்டிகள், கொரோனா பரிசோதனைக்கு பயந்து தங்களது வாகனத்தை வேறு பாதையில் திருப்பி சென்று விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com