கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டிய குடிமகன் கைது

ஈரோடு கலெக்டர் அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டு வீசுவேன் என மிரட்டல் விடுத்த குடிமகனை போலீசார் கைது செய்யதனர்.
கைது
கைது
Published on

ஈரோடு :

ஈரோடு மாவட்டம் பவானி வெள்ளித் திருப்பூர் வெங்ககல்லூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி டாஸ்மாக் கடையில் மேலாளராக உள்ளார். துடுப்பதி பள்ளப்பாளையம் காலனியை சேர்ந்த தொழிலாளி கவுரிசங்கர் (36) மது வாங்க வந்தார். 

டாஸ்மாக் மேலாளர் தியாகராஜன் வரிசையில் வந்தால் தான் மது தர முடியும் என கூறினார். கவுரிசங்கர் வரிசையில் வர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் பெருந்துறை போலீஸ் நிலையம், ஈரோடு கலெக்டர் அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டு வீசுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் கவுரிசங்கரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com