ஆவுடையார்கோவில் அருகே பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறித்தவர் கைது

ஆவுடையார்கோவில் அருகே பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஆவுடையார்கோவில்:

அறந்தாங்கியைச் சேர்ந்த விஸ்வநாதன் மனைவி சீலா. இவர், கடந்த 18-ந் தேதி ஆவுடையார்கோவிலில் இருந்து அறந்தாங்கிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். சமத்துவபுரம் பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்றபோது சீலாவின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை கார்க்கமலம் புதுவயலைச் சேர்ந்த சேசு மகன் டிஸ்க் அரவிந்த் (வயது 26) என்பவர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகாரின் பேரில், ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிஸ்க் அரவிந்தை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com