இந்தியாவில் இது முதல்முறை... அரசு பஸ் டிரைவர் வேலைக்கு பழங்குடியின பெண்கள் தேர்வு

இந்தியாவில் முதல் முறையாக பழங்குடியின பெண்கள் மகாராஷ்டிர அரசு போக்குவரத்து கழக டிரைவர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டிரைவர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட பெண்கள்
டிரைவர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட பெண்கள்
Published on

மகாராஷ்டிர மாநிலத்தில் பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய செய்ய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கிய திட்டம், பழங்குடியின பெண்களுக்கு கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு வழங்குவது ஆகும்.

அதன்படி, சமீபத்தில் மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், 163 பழங்குடியின பெண்களை தேர்வு செய்துள்ளது. போக்குவரத்து கழகத்தின் இந்த முன்முயற்சியை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்தார்.

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கு உரிய டிரைவிங் பயிற்சி வழங்கப்பட்டு, அதன்பின்னர் அரசு பேருந்துகளை ஓட்டும் டிரைவர்களாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com