மதுரவாயலில் 2 குழந்தைகள் கொலை- தாய் தற்கொலை முயற்சி

மதுரவாயலில் கடன் பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரவாயலில் 2 குழந்தைகள் கொலை- தாய் தற்கொலை முயற்சி
Published on

போரூர்:

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் கணபதி நகர் தாமஸ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தவர் சிபிராஜ்.

இவரது மனைவி சைலஜா. இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி (வயது 4) ஆதிதேஷ் (வயது 2) என்கிற இரண்டு குழந்தைகள்.

இன்று காலை 8.30 மணிஅளவில் கேரளாவில் இருந்து சிபிராஜின் நண்பர் ஜீனத் ஆலப்பாக்கத்தில் உள்ள சிபிராஜின் வீட்டிற்கு வந்தார்.

கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையறையில் சைலஜா மற்றும் 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு போராடிய சைலஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.

சைலஜா கணவரான சிபிராஜ் கோயம்பேட்டில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். பிப்ரவரி மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிபிராஜ் இறந்து விட்டார். சைலஜா சிபிராஜின் இரண்டாவது மனைவி.

கடன் பிரச்சனை காரணமாக குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சைலஜா மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சிபிராஜின் நண்பரான ஜீனத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com