மதுராந்தகம் அருகே மின்மோட்டார் அறையில் எரிசாராயம் பதுக்கல்

மதுராந்தகம் அருகே மின் மோட்டார் செட்டில் பதுக்கி வைக்கப்பட்டு எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மதுராந்தகம் அருகே மின்மோட்டார் அறையில் எரிசாராயம் பதுக்கல்
Published on

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே கரசங்கால் பகுதியில் எரி சாராயம் பதுக்கி வைக்கபட்டு உள்ளதாக மதுராந்தகம் டி.எஸ்.பி, ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது கரசங்கால் ஏரியில் ஊராட்சிக்கு சொந்தமான பழுதான மின் மோட்டார் செட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 55 கேன்களில் 2 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். விசாரணையில் எரிசாராயம் இதே பகுதியை சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கு சொந்தமானது என்றும் இவர் இப்பகுதியில் பிரபல சாராய வியாபாரி என்றும் தெரிய வந்தது.

சாராயம் பிடிபட்ட தகவல் அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். இந்த சாராய வியாபாரத்தில் உடந்தையாக இருந்த பெண் மாலாவை கைது செய்து உள்ளனர். சாராயம் எங்கு இருந்து கொண்டு வரப்பட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com