மதுரையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம்-செல்போன் பறிப்பு

மதுரையில் கத்தி முனையில் வாலிபரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம்-செல்போன் பறிப்பு
Published on

மதுரை:

மதுரை ஐராவதநல்லூர் கண்மாய் அருகே தூத்துக்குடியை சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது 27) நடந்து சென்றார். அப்போது 3 பேர் திடீரென வழி மறித்தனர். அவர்கள், பிரவீன்ராஜ் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

மேலும் அவரிடம் இருந்து ரூ. 7 ஆயிரத்து 400 மற்றும் ஆப்பிள் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் பிரவீன்ராஜ் புகார் செய்தார். அதில், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் பணம் பறித்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சண்முககுரு (20), ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த சிவகுமார் (20), அஜீத்குமார் (20) ஆகியோர்தான் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com