டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?- அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என விளக்கம் அளிக்குமாறு சுகாதாரத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. #Dengue
டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?- அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட உயிரை பாதிக்கும் காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, மருத்துவமனைகளில் போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பு வைப்பதோடு, சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com